
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் 62 வயது நபரை தாக்கிய குற்றத்துக்காக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளியில் ஏற்பட்ட சண்டை காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.
பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2-ம் தேதி விஜே பாபு என்பவரை தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த பாபு, தற்போது கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.