
சென்னை: ஒடிசா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி வழியில் தமிழகத்திலும் பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும். அமித் ஷாவின் பேச்சால் திமுகவினர் நடுங்கிப் போய் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழகம் வருகையால் ஒட்டுமொத்த திமுகவும் அரண்டு போயிருக்கிறது. எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழகத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று ஜம்பம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பயத்தில் உறைந்து போயிருப்பது தெரிகிறது.