• June 10, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், வாரக் கடைசியில் மட்டுமே கட்சி நடவடிக்கைகளுக்காக திருப்பூருக்கு வந்து செல்வதைச் சுட்டிக்காட்டி, ‘வீக் எண்ட்’ மாவட்டச் செயலாளர் என அதிமுக-வுக்குள் இருக்கும் சிலரே அவரை சத்தமில்லாமல் கலாய்க்கிறார்கள்.

திருப்​பூர் அதி​முக-வுக்​குள் இருக்​கும் கோஷ்டி பூசலை சமாளிக்க பொள்​ளாச்​சியி​லிருந்து ஜெய​ரா​மனை திருப்​பூர் மாநகர் மாவட்​டச் செய​லா​ள​ராக இறக்​குமதி செய்​தது அதி​முக தலை​மை. இந்த நிலை​யில், குடும்​பத்தை பொள்​ளாச்​சி​யில் வைத்​து​விட்டு அரசி​யல் நடவடிக்​கை​களுக்​காக அவ்​வப்​போது திருப்​பூருக்கு வந்து செல்​வதை வழக்​க​மாக்​கிக் கொண்​டார் ஜெய​ரா​மன். முக்​கிய நிகழ்​வு​கள் ஏதும் இல்​லாத போது பெரும்​பாலும் அவர் வாரக் கடைசி​யிலேயே திருப்​பூருக்கு வந்து செல்​வ​தால் அவரை ‘வீக் எண்ட்’ மா.செ என தமாஷ் பண்​ணுகி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய திருப்​பூர் அதி​முக சீனியர்​கள் சிலர், “இப்​போது அதி​முக-​வில் எல்​லோருக்​கும் எஸ்​.பி.வேலுமணி​யைத் தான் பிர​தான​மாக தெரி​கிறது. ஆனால், வேலுமணி அதி​முக-வுக்​குள் வரும் போதே கோவை மாவட்ட அதி​முக செய​லா​ள​ராக இருந்​தவர் பொள்​ளாச்சி ஜெய​ரா​மன். திருப்​பூர் மாவட்ட அதி​முக-வை பொறுத்​தவரை முன்​னாள் அமைச்​சர் எம்​.எஸ்​.எம்​.ஆனந்​தன், எம்​எல்​ஏ-​வான கே.என்​.​விஜயகு​மார், முன்​னாள் எம்​எல்​ஏ-​வான சு.குணசேகரன், முன்​னாள் எம்​பி-​யான சிவ​சாமி என நான்கு பேரும் நான்கு திசை​யில் பாராமுக அரசி​யல் செய்து வரு​கி​றார்​கள். இதனாலேயே உள்​ளூர்க்​காரர்​களை தவிர்த்​து​விட்டு வெளியூர்​கார​ரான பொள்​ளாச்சி ஜெய​ரா​மனை மாநகர் மாவட்​டத்​துக்கு செய​லா​ள​ராக்​கியது தலை​மை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *