• June 10, 2025
  • NewsEditor
  • 0

செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர் மீது ரப்பர் தோட்டா பாய்ந்த வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து லாரென் டொமாஸி என்ற நைன் நியூஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர், செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது காவல்துறையினர் சுட்ட ரப்பர் தோட்டா செய்தியாளர் மீது பாய்ந்தது. இதில் அந்த செய்தியாளர் காயமடைந்துள்ளார். இந்த தாக்குதல் வீடியோவாக பதிவாகி இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *