
டேராடூன்: “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மதத்தைக் கேட்டுக் கொன்றனர். நாம் அவர்களின் 'தர்மா'வை கேட்கவில்லை. மாறாக, அவர்களின் கர்மாவை (செயல்) பார்த்து பதிலடி கொடுத்தோம்” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "பிரதமரின் தலைமையில், இந்தியாவின் ஒவ்வொரு பகுதி குறித்தும் நாங்கள் போதுமான கவனம் செலுத்தியிருந்தாலும், எல்லை மற்றும் மலைப்பகுதி மாநிலங்களின் வளர்ச்சியில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதற்குக் காரணம், நமது எல்லை மாநிலங்கள் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானவை.