
புதுடெல்லி: “தயவுசெய்து என்னை தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம். செனாப் பாலத்துக்காக பாராட்டப்பட வேண்டிய ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவர். செனாப் நதியின் மீது கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில் வளைவுப் பாலத்துக்கான பெருமை இந்திய ரயில்வேக்கும், ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத ஹீரோக்களுக்கும் சொந்தமானது” என்று பேராசிரியர் மாதவி லதா தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது லிங்க்டு இன் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செனாப் ரயில்வே பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததற்கு இந்தியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் பாலம் ஒரு சிவில் இன்ஜினியரிங் அற்புதம். திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் அனைத்துப் பெருமையும் இந்திய ரயில்வே மற்றும் AFCONS-க்கு உரியது.