• June 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜூன் 10) நடைபெற்ற நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றும், 7 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் செல்லாதவை என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஜூன் 19-ல் நடைபெறும் தேர்தலுக்காக வரப்பெற்ற வேட்பு மனுக்கள் இன்று (ஜூன் 10) முற்பகல் 11 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆய்வுக்குப் பின், ஐ.எஸ்.இன்பதுரை (அதிமுக), ம.தனபால் (அதிமுக), கமல்ஹாசன் (மநீம), எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக), கவிஞர் சல்மா (எ) ராஜாத்தி, பி.வில்சன் ஆகிய 6 வேட்பாளர்கள் அளித்த வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவை என அறிவிக்கப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *