
‘டூட்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் படம் ஒன்றை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
கீர்த்திவாசன் இயக்கிவரும் ‘டூட்’ (DUDE) படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். தீபாவளி வெளியீடாக இருக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.