• June 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மக்களவை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவாக தொடங்குமாறு பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கார்கே எழுதியுள்ள கடிதத்தில், "மக்களவையில் துணை சபாநாயகர் பதவி காலியாக இருப்பது தொடர்பாக நிலவும் கவலைக்குரிய விஷயத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக எழுதுகிறேன். அரசியலமைப்பு ரீதியாக துணை சபாநாயகர், சபாநாயகருக்குப் பிறகு அவையின் இரண்டாவது மிக உயர்ந்த தலைமை அதிகாரி ஆவார். அரசியலமைப்பின் 93-வது பிரிவின்படி, மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு மிகவும் முக்கியம். இரண்டு பதவிகளும் காலியாகும்போது, ​​மற்றொருவர் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *