
மதுரை: தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வயதானவர்களை குறி வைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேருந்து நிலையங்கள், சாலை ஓரங்களில் முதியவர்களை உறவினர்கள் தனியே விட்டுச்செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. முதியவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து வந்து அங்கேயே விட்டுச் செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு தனித்து விடப்படும் முதியவர்கள் வாழ்வாதாரத்துக்காக யாசகம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.