• June 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்களை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளும் பாஜகவும், முதல்வர் ரேகா குப்தாவும் டெல்லி மக்களின் கோபத்தை எதிர்கொள்வார்கள் என்று ஆதிஷி விமர்சித்துள்ளார்.

தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்கத்தில் உள்ள பூமிஹீன் முகாமில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்களுக்குள் தாமாக முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) அறிவித்திருந்தது. ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் குடியிருப்புகளுக்குள் உள்ள பொருட்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *