• June 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தொழிலதிபருக்கு எதிரான வங்கிக் கடன் வழக்கு விசாரணையை ஓராண்டில் முடிக்க வேண்டும் என சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்படாத நிலையில், வெளிநாட்டுக் குடிமகனை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளது.

தொழிலதிபர் சிவசங்கரன் இந்தியாவில் ஐடிபிஐ வங்கியில் 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றார். அந்த பணத்தை சட்டவிரோதமாக பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் உள்ள நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்துள்ளார். மேலும், வங்கியில் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தொழிலதிபர் சிவசங்கரனுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *