
கடந்த சனிக்கிழமை (ஜூன் 5), உலக வங்கி இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளன.
இந்தத் தரவுகள் 2011-12 நிதியாண்டோடு 2022-23 நிதியாண்டை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தரவுகளில் பணவீக்கத்திற்கு ஏற்ப, மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருப்பவர்களின் வருமானத்தை ஒரு நாளைக்கு 2.15 டாலரில் இருந்து 3 டாலர்களாக உயர்த்தியுள்ளது உலக வங்கி.
இந்தத் தரவுகளின் படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஓர் ஒப்பீட்டை பார்க்கலாம்…
2011-12 நிதியாண்டில், மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருந்த 27.1 சதவிகிதத்தினர் 2022-23 நிதியாண்டில் 5.3 சதவிகிதமாக குறைந்துள்ளனர்.
2011-12 நிதியாண்டில், 344.47 மில்லியன் பேர் இந்தியாவில் மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருந்தனர். 2022-23 நிதியாண்டில், 75.24 மில்லியன் பேர் என மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது, இடைப்பட்ட காலக்கட்டத்தில், கிட்டத்தட்ட 269 மில்லியன் பேர் இந்தியாவில் மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.
பாகிஸ்தானை பொறுத்தவரை, 2017 மற்றும் 2021 ஆண்டுகளின் இடையே, அவர்களின் மிகுந்த ஏழ்மைக் கோடு சதவிகிதம் 4.9 சதவிகிதத்தில் இருந்து 16.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த ஏழ்மை சதவிகிதம் பாகிஸ்தானில் 39.8 சதவிகிதத்தில் இருந்து 44.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தத் தரவுகளில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 4.2 டாலர் வருமானம் என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ஏன் இந்த ஏற்ற, இறக்கங்கள்?
மேலே குறிப்பிட்டுள்ள 11 ஆண்டு காலக்கட்டத்தில், இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக, இந்தக் காலக்கட்டத்தில், வளரும் பொருளாதாரமாகவும், தற்சார்புடையதாகவும் உயர்ந்துள்ளது.
ஆனால், பாகிஸ்தான் 2017 முதல் 2021 வரை ஐந்து ஆண்டுகளில்…
சர்வதேச நாணய நிதியத்திடம் 25 நிலுவைகளில் 44.57 பில்லியன் டாலர்கள் கடன்கள்;
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, இஸ்லாமிய வளர்ச்சி வங்கியில் கிட்டத்தட்ட 38.8 பில்லியன் டாலர் கடன்கள்;
சீனாவிடம் இருந்து 25 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட கடன்கள்;
பாண்டுகள் மூலம் 7.8 பில்லியன் டாலர்கள் கடன்கள்;
சவுதி அரேபியா, பாரீஸ் கிளப் போன்றவற்றில் இருந்து பல பில்லியன் கடன்கள் வாங்கியுள்ளது.
இந்தியாவிற்கும் பல கடன்கள் உள்ளது தான். ஆனால், பாகிஸ்தானை ஒப்பிடுகையில் குறைவு தான்.