
ஈரான் நாட்டின் பொது இடங்களில் நாய்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தடையை மீறும் நாய் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை என்றாலும், மாறாக உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் காவல்துறை உத்தரவுகள் மூலம் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம், சமூக ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுவெளியில் கிட்டத்தட்ட ஈரானின் 20 நகரங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாய்களுடன் நடப்பது பொதுமக்களுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது என்று ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர். நாய்களுடன் நடப்பது பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கெர்மன்ஷா, இலம், ஹமதான், கெர்மன், போரூஜெர்ட், ரோபட் கரீம், லாவசனாட் மற்றும் கோலெஸ்தான் உள்ளிட்ட நகரங்களில் நாய்கள் பொதுவெளியில் நடக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஃபராஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
சமூக ஒழுங்கைப் பராமரிப்பதையும், நாட்டின் அதிகாரப்பூர்வ மதமான ஷியா இஸ்லாத்தை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூங்காக்கள், பொது இடங்களில் நாய்களை நடமாடுவதைக் கண்டாலோ அல்லது வாகனங்களில் அவற்றை சுமந்து செல்வதைக் கண்டாலோ சம்மந்தப்பட்டவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஜூன் 6 முதல் அமலுக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.