
கடலூர்: சிதம்பரத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி துறையினர் அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பேட்டை பகுதிலிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றினார்.