
புது டெல்லி: “ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது அபத்தமானது.” என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'ஜம்மு-காஷ்மீர் மற்றும் மணிப்பூரில் அமைதி நிலவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கூறிய கருத்து அபத்தமானவை மற்றும் ஆதாரமற்றவை. தனது சொந்த மிகப்பெரிய தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்த கருத்தினை கூறியுள்ளார்