• June 10, 2025
  • NewsEditor
  • 0

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், கடந்த வாரம் குளோபல் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன் பை சேட்டிலைட் (GMPCS) உரிமத்தை தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT)  பெற்றுள்ளது.

இதன் மூலம் உலகின் பல நாடுகளில் இணைய சேவை வழங்கிவரும் ஸ்டார்லிங்க், இந்தியாவிலும் காலடி எடுத்து வைக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த இணைய சேவை இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணைய சேவையை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்து, பிரபலபடுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது ஸ்டார்லிங்க் நிறுவனம். அவ்வகையில் முதல் ஒரு மாதத்திற்கு இலவச சேவையை வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்பிறகு படிப்படியாக இலவச சேவை நிறுத்தப்பட்டு, பணம் வசூலிக்கப்படும்.

ஸ்டார்லிங்க் இணையசேவை கருவிகள்

இதில் சிக்கல் என்னவென்றால் அதன் விலைதான். ஸ்டார்லிங் சேவை கருவியின் விலை ரூ.33 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படவுள்ளது. மாத கட்டணமாக ரூ.3000 வசூலிக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் இந்த ஸ்டார்லிங்க்கின் இணைய சேவையின் வேகம் 50Mbps முதல் 220Mbps வரை இருக்கிறது. குறைந்த வேகத்திற்கு ஒரு விலை, அதிக வேகத்திற்கு மற்றொரு விலை என பல திட்டங்கள் மற்ற நிறுவனங்களில் உள்ளதை போலவே இங்கும் இருக்கிறது. இதன் சிறப்பம்சம் மிகக்குறைவான latency என்று பெரும்பாலான பயன்பாட்டாளர்களால் கூறப்படுகிறது.

ஏற்கனவே Airtel, Jio நிறுவனங்கள் போட்டிப் போட்டு இந்தியாவில் இணையசேவை வழங்கி வருகின்றன. இதற்கிடையில் BSNL அரசின் கவனிப்பின்றி, கார்ப்பரேட் போட்டியில் வீழ்ந்துகிடைக்கிறது. இந்த நிலையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இந்தியாவில் களமிறங்குகிறது. எது எப்படியோ இந்தக் கடும்போட்டியில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல விலையில் இணையசேவை கிடைத்தால் நல்லது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *