
மங்களூரு: கொழும்பில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த சிங்கப்பூர் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதில் இருந்த 22 பணியாளர்களில் 18 பேரை இந்திய கடற்படை மீட்டுள்ளது.
சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான எம்வி வான் ஹை 503, கொழும்பில் இருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் நேற்று (ஜூன் 9) கேரளாவின் பேப்பூர் கடற்கரையில் இருந்து சுமார் 78 கடல் மைல் தொலைவில் இருந்தபோது திடீரென தீ பிடித்துள்ளது.