
புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் பிஹாரின் மறைந்த தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் தொடங்கிய கட்சி லோக் ஜனசக்தி (எல்ஜேபி). இவர், மத்தியில் எந்த கட்சி தலைமையில் ஆட்சி வந்தாலும் கூட்டணி வைத்து அமைச்சராக இருந்தவர். இவரது மகன் சிராக் பஸ்வான், தற்போது பாஜக தலைமையிலானக் கூட்டணியில் மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார்.
ஆராவில் நேற்றுமுன்தினம் எல்ஜேபி மாநாடு நடைபெற்றது. அப்போது எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் பேசுகையில், ‘‘நான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன். 243 தொகுதிகளிலும் எல்ஜேபி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். பிஹார் மக்களுக்கான தேர்தலில் தனித்தொகுதி அல்லாத பொது தொகுதியில் போட்டியிடுவேன். பிஹாரை முதல் மாநிலமாக மாற்றவே இந்த முடிவை எடுக்கிறேன்’’ என்றார்.