
சென்னை: சென்னை காவல் துறையில் உள்ள மோப்பநாய் படைப்பிரிவுக்கு, புதிதாக 11 நாய் குட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வெளிநாட்டு வகை நாய்களுக்கு தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டது.
கொலை, கொள்ளை, போதைப் பொருள் பதுக்கல் உள்பட பல்வேறு குற்றச்செயல்களைக் கண்டுபிடிக்கவும், வெடிகுண்டுகளைக் கண்டறியும் பணியிலும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைப் பராமரிக்கவும், பயிற்சி அளிக்கவும், சென்னை காவல் துறையில் துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவு உள்ளது. சென்னையில் கீழ்ப்பாக்கம் மற்றும் புனித தோமையர் மலையில் இந்த படைப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.