
புதுடெல்லி: இந்திய விமானப் படைக்காக ரூ.10,000 கோடியில் 3 உளவு விமானங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 7 முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. இந்த போரில் இந்திய விமானப் படையின் ட்ரோன்கள், உளவு விமானங்கள் மிக முக்கிய பங்கு வகித்தன.
தற்போது இந்திய விமான படையில் பாம்பார்டியர் குளோபல் 5000, போயிங் 707-337சி, கல்ப்ஸ்டீரிம் ஜி100 ஆகிய உளவு விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் இஸ்ரேல் தயாரிப்பான ஹெரோன் ட்ரோன்கள் மற்றும் இந்திய விமானப் படையில் இருந்து விடுவிக்கப்பட்ட மிக் 25 ரக போர் விமானங்களும் உளவு விமானங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர பல்வேறு ட்ரோன்கள், ஹெலிகாப்டர்களும் எதிரி நாடுகளை வேவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.