
எருதுக்கு நோவாம் காக்கைக்கு கொண்டாட்டமாம் என்று ஒரு சொலவடை சொல்வார்கள். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக-வில் இப்போது நடக்கும் விஷயங்கள் அப்படித்தான் இருக்கிறது.
ஒரு காலத்தில் ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்ட திமுக-வுக்கே செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி இப்போது எந்தப் பதவியும் இல்லாமல் இருக்கிறார். விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்கு இவரது மகனும் எம்பி-யுமான கவுதமசிகாமணி செயலாளராக இருக்கிறார். பொன்முடி விழுப்புரம் மாவட்ட திமுக-வின் அசைக்க முடியாத அதிகார மையமாக இருந்தபோது, அவரை எதிர்த்து அரசியல் செய்தவர் அன்னியூர் சிவா. துரைமுருகன், கே.என்.நேரு, ஜெகத்ரட்சகன் ஆகியோருடன் தனக்கிருக்கும் நெருக்கத்தைப் வைத்துக்கொண்டு பொன்முடியை தாண்டி தனி ஆவர்த்தனம் செய்துவந்தார் சிவா.