
மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கலாம், ஆனால் பூஜைகள் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது.