• June 10, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: சேலத்​துக்கு 2 நாள் பயண​மாக நாளை (ஜூன் 11) வரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 11 கி.மீ. ரோடு ஷோவில் பங்​கேற்​கிறார். 12-ம் தேதி மேட்​டூர் அணை​யில் இருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு நீர் திறந்து வைக்​கிறார். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 2 நாள் பயண​மாக சேலத்​துக்கு நாளை வரு​கிறார். காலை 10 மணிக்கு சென்​னையி​லிருந்து விமானத்​தில் கோவை வரும் முதல்​வர் அங்​கிருந்து சாலை மார்க்​க​மாக ஈரோடு மாவட்​டம் பெருந்​துறை செல்​கிறார்.

அங்கு நடை​பெறும் வேளாண் கண்​காட்சி மற்​றும் கருத்​தரங்​கத்தை தொடங்கி வைத்து 50 ஆயிரம் விவ​சா​யிகளுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கு​கிறார். பின்​னர் அன்று மாலை சேலம் செல்​லும் முதல்​வர் திமுக நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை மேற்​கொள்​கிறார். அன்​றிரவு மேட்​டூரில் தங்​கு​கிறார். மறு​நாள் 12-ம் தேதி மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறந்து வைக்​கிறார். பின்​னர் சேலம் இரும்​பாலை அரு​கே​யுள்ள அரசு மோகன் குமாரமங்​கலம் மருத்​து​வக் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெறும் அரசு விழா​வில் பங்​கேற்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *