• June 9, 2025
  • NewsEditor
  • 0

வணிக ரீதியான பயணங்கள், விடுமுறை நாட்கள் கழிப்பது என பயணங்கள் மேற்கொள்ளும் போது, இளைப்பாற பெரும்பாலும் ஹோட்டல்களில் மக்கள் தங்குகின்றனர்.

அப்படி தங்கும் ஹோட்டல் அறைகளில் பல வசதிகள் இருக்கும். நீச்சல் குளங்கள் தொடங்கி நடன பார்கள் வரை பல வசதிகள் இருக்கும். ஆனால் கடிகாரம் மட்டும் இருக்காது.

ஏன் அவ்வாறு பெரும்பாலான ஹோட்டல்களில் கடிகாரங்கள் வைப்பதில்லை என்பது குறித்த வித்தியாசமான தகவலை தான் இங்கு பகிர்ந்து கொள்ளப்போகிறோம்.

பெரும்பாலான ஹோட்டல் அறைகளில் கடிகாரங்கள் வைத்திருப்பது கிடையாது. இதற்கு இரண்டு வகையான காரணங்கள் இருக்கின்றன.

ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்கள் நேரம் தொடர்பான மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஹோட்டல் அறைகளில் கடிகாரம் வைப்பதை தவிர்க்கின்றனர்.

கடிகாரம், அட்டவணைகள் ஆகிய நினைவூட்டும் விஷயங்களை நீக்குவதன் மூலம் ஹோட்டல் அறைகள் எந்த விதமான காலக்கெடுவும் இன்றி ஓய்வு பெற முடியும் என்று நம்புகின்றனர்.

வணிக நோக்கங்களுக்காகவும் சில ஹோட்டல்கள் கடிகாரத்தை தவிர்க்கின்றன.

அதாவது, ஹோட்டலில் விருந்தினர்களுக்கு நேரம் தெரியாவிட்டால் அதிக நேரம் ஹோட்டலில் செலவிடுவார்கள், இதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் கடிகாரத்தை ஹோட்டல் நிர்வாகம் தவிர்க்கிறது.

அடிக்கடி கடிகாரத்தை பார்க்கும் விருந்தினர்களை திசை மாறச் செய்யாமல் இருப்பதை நோக்கமாக கொண்டுள்ளது, இந்த கான்செப்ட்.

நீங்கள் தங்கிய ஹோட்டல் அறையில் கடிகாரம் இருந்ததா என்பதை கமென்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *