
சென்னை: மனைவி தனது நோய்வாய்ப்பட்ட பெற்றோரை பராமரிப்பதை கணவருக்கு இழைக்கும் கொடுமையாகவோ, மன உளைச்சல் ஏற்படுத்தியதாகவோ கருத முடியாது என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம், விவாகரத்து கோரிய கணவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை வடபழனியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் குமரன் என்பவருக்கும், சென்னை நந்தனத்தில் தனது அத்தையுடன் வசித்து வந்த பட்டதாரி பெண் செல்விக்கும் கடந்த 2017 ஜூனில் திருமணம் நடந்தது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) திருமணத்துக்கு பிறகு, இருவரும் நந்தனத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் சென்றனர்.