
சென்னை: மது குடித்துவிட்டு பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநருக்கு கடும் தண்டனை வழங்குவது தொடர்பாக போக்குவரத்து துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்து கழகத்தில் மது குடித்துவிட்டு பணிக்கு வரக் கூடாது எனவும் அதற்கான தண்டனை குறித்தும் சுற்றறிக்கை வாயிலாக பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மது அருந்தியிருப்பதை கண்டறியும் கருவியும் கொள்முதல் செய்யப்பட்டு, நாள்தோறும் சோதனை நடத்தப்படுகிறது.