
சென்னை: ராணுவ வீரர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை உரிய காலக்கெடுவுக்குள் ஒப்படைக்காததால் ஏற்பட்ட தாமதத்துக்கு ஆண்டுக்கு 9.30 சதவீத வட்டியும், சேவை குறைபாடுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவுக்காக ரூ.25 ஆயிரமும் வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு ராணுவ நல வீட்டுவசதி அமைப்பு சார்பில் லாப நஷ்டம் இல்லாத அடிப்படையில், சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த தாழம்பூரில் ‘தினேஷ் விஹார்’ என்ற பெயரில் இரட்டை பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.