
மதுரை: தமிழகத்தில் அனைத்து தலைவர்களின் சிலைகளையும் ஒரே இடத்தில் அமைப்பதற்காக ‘தலைவர்கள் பூங்கா’ உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் காய்கறி மார்க்கெட் நுழைவுவாயிலில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் பெயர் பலகை அமைக்க அனுமதி கோரி பால்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.