
மதுரை: மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வெளியே பேருந்தில் பயணிகள் ஏறிய விவகாரத்தில், அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் கிளை ஓட்டுநரை காலணியால் தாக்கிய பேருந்து நிலைய துணை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாராபுரம் கிளையை சேர்ந்த அரசு பேருந்து நேற்று (ஜூன் 8) இரவு மதுரைக்கு சிறப்பு பேருந்தாக இயக்கப்பட்டது. அந்தப் பேருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு அதிகாலை 2 மணியளவில் வந்ததும் வெளியூர் பேருந்துகள் பயணிகளை இறக்கி விடும் இடத்தில் (பெரிய தண்ணீர் தொட்டி அருகே) பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.