
ராய்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இன்று (ஜூன் 9, 2025) மாவோயிஸ்டுகளால் வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்ததில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே உயிரிழந்தார். மேலும் பல அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா, ஏஎஸ்பி ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். முன்னதாக, குண்டுவெடிப்பில் கிரிபுஞ்சே படுகாயமடைந்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது.