
மும்பை: மும்பையில் கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
மும்பையில் மும்ப்ரா ரயில் நிலையம் அருகே இன்று காலை 9.30 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSTM) நோக்கிச் சென்றுகொண்டிருந்த புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமான பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்துள்ளனர்.