
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் வாகனங்களை பதிவு செய்யும்போது வாகன விற்பனையாளர்கள் பலர் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை என்ற புகார் உள்ளது. இதையடுத்து மாநில அரசு 25 வாகன விற்பனையாளர்களின் வர்த்தக உரிமங்களை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஜூன் 3-ம் தேதி தொடங்கிய இடைநீக்க காலத்தில் லக்னோ, பாராபங்கி, சீதாபூர், குஷிநகர், மொரதாபாத் மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாவட்டங்களின் விற்பனையாளர்கள் சிக்கி உள்ளனர்.
இந்த விற்பனையாளர்கள் 25 பேரும், வாகனங்களை விற்கவோ அல்லது பதிவு கோரிக்கைகளை பதிவேற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் புதிய வாகனங்கள் பதிவுக்கான ‘வாஹன்’ இணையத்திலும் இந்த 25 விற்பனையாளர்களும் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.