
மும்பை: மக்கள் தீர்ப்பை ராகுல் காந்தி ஏற்க மறுப்பது அவர்களை அவமதிக்கும் செயல் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார். குறிப்பாக, வாக்காளர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது ஏன், திடீரென வாக்கு சதவீதம் அதிகரித்தது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்போதே தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது.