
பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் ஒரே மகனை இழந்த தந்தை, மகனின் சமாதியில் கண்ணீர் சிந்தி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றது. இதன் வெற்றி விழா கடந்த 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் பூமிக் லட்சுமணனும் (21) ஒருவர். இன்ஜினீயரிங் கல்லூரி இறுதி ஆண்டு மாணவரான அவர், குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்காமல் ஆர்சிபி வெற்றி விழாவில் பங்கேற்று உள்ளார். அவரது உயிரிழப்பு குடும்பத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.