• June 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: 2027 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது நாடாளுமன்றத்தில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவம் குறையுமா? குறையாதா? என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சி என்ற மகத்தான அரணை புல்டோசர்களைக் கொண்டு இடித்து தள்ளி நாசம் செய்யும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. எந்தவித விவாதங்களுமின்றி மக்களைப் பாதிக்கும் சட்டங்களைக் கொண்டு வருவது, சர்வாதிகார போக்கோடு மாநிலங்களை வஞ்சிப்பது தொடர்கதையாகி வருகிறது. அதன் உச்சமாக அவர்கள் நிறைவேற்றத் துடிப்பதுதான் 2027 மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *