• June 8, 2025
  • NewsEditor
  • 0

ஆமீர் கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 20-ம் தேதி வெளியாகவிருக்கிறது. தமிழில் ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

‘லால் சிங் சத்தா’ படத்தின் தோல்வி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக இப்படத்திலிருந்து முதலில் விலக முடிவு செய்திருக்கிறார் ஆமீர் கான்.

Sitaare Zameen Par

அதன் பிறகு, இப்படத்தை இந்தியில் ஃபர்ஹான் அக்தரையும், தமிழில் சிவகார்த்திகேயனையும் வைத்து எடுக்க முடிவு செய்திருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தத் தகவலை ஆமீர் கான் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், ” ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்திற்குப் பிறகு நான் மனமுடைந்து போனேன், ஏனெனில் நான் அந்தத் திரைப்படத்தை மிகவும் விரும்பினேன். இப்போதும் நான் அதை விரும்புகிறேன், அது மிகவும் அழகான படம் என்று நினைக்கிறேன்.

ஆனால், பெரும்பாலான பார்வையாளர்களுக்கு அது பிடிக்கவில்லை. அதனால், எனக்கு மிகவும் மனவேதனையாக இருந்தது. நான் பிரசன்னாவை அழைத்து, நான் மனச்சோர்வில் இருப்பதாகவும், வேலை செய்ய முடியாது என்றும் கூறினேன்.

நான் ஒரு உணர்ச்சிவசப்பட்டவன், அதனால் ஒரு படத்தில் வேலை செய்வது எனக்கு கடினமாக இருந்திருக்கும். நான் அப்போது அழுது கொண்டிருந்தேன், வீட்டை விட்டு வெளியே கூட செல்ல விரும்பவில்லை. அதனால், வேறு ஒருவரை வைத்து படத்தை எடுக்குமாறு அவரிடம் கேட்டேன்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

அவர் என்னைப் புரிந்துகொண்டதால், என்னைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அவர் என்னை தயாரிப்பாளராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார், மேலும் படத்தில் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயனை இறுதி செய்தார்.

அதன் பிறகு, திடீரென எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது, ‘நான் ஏன் இந்தப் படத்தை செய்யவில்லை? இது மிகவும் நல்ல ஸ்கிரிப்ட், இதை விட்டுவிட நான் பைத்தியமாகிவிட்டேனா?’ ஆனால், நான் அவர்களிடம் எதுவும் சொல்ல முடியவில்லை.

ஒரு வாரம் கழித்து, எல்லாம் முடிவான பிறகு, நான் இறுதியாக என் உணர்வுகளை ஒப்புக்கொண்டேன். ஆனால், பிரசன்னாவிடம் எந்த நடவடிக்கையும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினேன்.

அவர், ‘இது உங்களுடைய படம், நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும். நீங்கள் என்னை இயக்குநராக மறுக்க முடியாது, ஏனெனில் நீங்கள் என் முதல் தேர்வு.

இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுடன் இருக்கிறேன், எனவே இதைச் செய்யாதீர்கள்’ என்று கூறினார். நான் ஒரு தடுமாற்றத்தில் இருந்தேன், ஏனெனில் ஃபர்ஹானும் இந்தக் கதையைக் கேட்டு மிகவும் உற்சாகமாக இருந்தார், மேலும் அதை வித்தியாசமாகச் செய்ய விரும்பினார்.

இறுதியாக, நான் ஃபர்ஹான் மற்றும் சிவகார்த்திகேயனிடம் பேசினேன். நான் அவர்களிடம் நேர்மையாக இருந்தேன், அவர்களும் ஒப்புக்கொண்டனர். ஃபர்ஹான், நிச்சயமாக, ஏமாற்றமடைந்திருப்பார்.

Aamir Khan
Aamir Khan

அவர் என்னிடம், ‘நான் இந்தக் கதாபாத்திரத்தை மிகவும் விரும்புகிறேன், ஆனால் நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும், ஏனெனில் நீங்கள்தான் முதல் தேர்வு’ என்று கூறினார். அவர் மிகவும் இனிமையாகவும் ஆதரவாகவும் இருந்தார்.

அதேபோல், சிவகார்த்திகேயனும், ‘ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்? நீங்கள் இந்தப் படத்தைச் செய்யுங்கள், இது உங்களுடைய படம்’ என்று கூறினார். இருவரும் மிகவும் இனிமையாகவும் ஆதரவாகவும் இருந்தனர். அதன்பிறகு, நான் இறுதியாக படத்திற்குத் திரும்பினேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *