• June 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு நள்ளிரவில் ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் பயணிகள் வருவதால், கூடுதல் பேருந்துகள் இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 4-ம் தேதி இரவு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இல்லாததால் 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிப்பட்டனர். அவர்கள், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையில் இரு புறமும் 3 கி.மீ. வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. போக்குவரத்து துறை மீது பயணிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், இது குறித்து அரசு விரைவு போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *