
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து 4 முறை கடிதம் அனுப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை இந்தியா பொருட்படுத்தவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.