
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்துக்காக பிரபல யூடியூபர் ஜோதி மல்கோத்ராவை, ஹரியானா போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர்.
கடந்த வாரம் மற்றொரு யூடியூபர் ஜஸ்பிர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இருவரும் இந்தியாவின் ராணுவ முகாம்கள், நடமாட்டங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்கு பகிர்ந்தது தெரிய வந்துள்ளது. மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷ் என்பவருடன் தொடர்பில் இருந்ததும், அவரது அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு பல முறை சென்று வந்ததும் அங்கு பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அதிகாரிகளை சந்தித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரி டேனிஷ் இந்தியாவில் இருந்து கடந்த மாதம் வெளியேற்றப்பட்டார்.