• June 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​பாகிஸ்​தானுக்கு உளவு பார்த்த குற்​றத்​துக்​காக பிரபல யூடியூபர் ஜோதி மல்​கோத்​ராவை, ஹரி​யானா போலீ​ஸார் சமீபத்​தில் கைது செய்​தனர்.

கடந்த வாரம் மற்​றொரு யூடியூபர் ஜஸ்​பிர் சிங் என்​பவர் கைது செய்​யப்​பட்​டார். இரு​வரும் இந்​தி​யா​வின் ராணுவ முகாம்​கள், நடமாட்​டங்​கள் குறித்த தகவல்​களை பாகிஸ்​தானின் உளவு அமைப்​பான ஐஎஸ்​ஐ.க்கு பகிர்ந்​தது தெரிய வந்​துள்​ளது. மேலும், டெல்​லி​யில் உள்ள பாகிஸ்​தான் தூதரக அதி​காரி டேனிஷ் என்​பவருடன் தொடர்​பில் இருந்​ததும், அவரது அழைப்​பின் பேரில் பாகிஸ்​தானுக்கு பல முறை சென்று வந்​ததும் அங்கு பாகிஸ்​தான் ராணுவம், ஐஎஸ்ஐ அதி​காரி​களை சந்​தித்​ததும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்து அதி​காரி டேனிஷ் இந்​தி​யா​வில் இருந்து கடந்த மாதம் வெளி​யேற்​றப்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *