
பொதுமக்கள், வாக்காளர்கள் குறைகளை கேட்டு பொறுமையாக பதிலளிக்க வேண்டும் என்றும் இளைஞர்களை அதிகளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலை திமுக, பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. முன்னதாக தேர்தல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்டது. தொடர்ந்து 8 மண்டலங்களாக பிரித்து, மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டனர்.