
கோவை: பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தமிழ் மண்ணில் இடமில்லை என கோவையில் இன்று (ஜூன் 7) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (ஜூன் 7) கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்காமல், வேறு மாநிலங்களுக்கு நிதியை கொடுக்கின்றனர். இதற்கு மத்திய அமைச்சர் முருகன் பதில் தெரிவிக்க வேண்டும்.