
சென்னை: மன்னராட்சிக்கு மகுடம் சூட்டும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது என்றும், பதவி கிடைக்காததால் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “மதுரை பொதுக்குழுவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திமுகவின் தீர்மானம் என்ன?. மன்னராட்சிக்கு வழிவகுக்க உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக துணை நிற்கும் என்று தீர்மானம் போட்டார்கள்.