
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் ஜூன் 20-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.
இந்தத் தொடரில், விராட் கோலியின் இடத்தை நிரப்புவது யார் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முடிவு என்னவாக இருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றதிலிருந்து கோலி மீண்டும் வருவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியிருக்கிறார்.
Beyond23 கிரிக்கெட் பாட்காஸ்டில் பேசிய மைக்கேல் கிளார்க், “இங்கிலாந்துக்கெதிராக இந்தியா 5 – 0 எனத் தொடரை இழந்தால், ஓய்விலிருந்து கோலி வெளியே வந்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள்.
இங்கிலாந்தில் இந்திய அணி தோற்கடிக்கப்பட்டால், புதிய கேப்டன், அணித் தேர்வாளர்கள், ரசிகர்கள் அவரிடம் கேட்டால் கோலி அணிக்குத் திரும்புவார்.

அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறார். இந்த ஃபார்மெட்டில் அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் ஓய்வு பெற்றதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்.
இருப்பினும், இங்கிலாந்தில் 5 – 0 என இந்திய அணி தோற்கும் என்று நான் நினைக்கவில்லை.
கோலி, ரோஹித் இல்லாமல் கூட இங்கிலாந்தில் இந்தியா வெற்றி பெற முடியும். இந்திய அணி நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…