• June 7, 2025
  • NewsEditor
  • 0

“வெளியில தலைக்காட்ட முடியல… ஓட்டுப் போட்ட மக்களுக்கும் பதில் சொல்ல முடியல. அடுத்த தேர்தலுக்கு வார்டுக்குள்ள ஓட்டுக் கேட்டுப் போறதே சிரமமாகிடும் போலிருக்கு” – இப்படிப் புலம்புகிறவர்கள் வேறு யாருமல்ல… வேலூர் மாநகராட்சியில் இருக்கும் திமுக-வின் நான்கு மண்டலக்குழு தலைவர்களும் தான். இவர்களை இப்படி புலம்ப வைத்திருப்பவர் திமுக-வைச் சேர்ந்த மேயர் சுஜாதா!

​தி​முக வசமிருக்​கும் வேலூர் மாநக​ராட்​சி​யில் மேயர், துணை மேயர் 4 மண்​டலங்​களின் தலை​வர்​கள் என அனைத்​தை​யும் திமுக-வே கைப்​பற்றி வைத்​திருக்​கிறது. இருந்த போதும், அதி​காரத்​துக்கு வந்து மூன்று ஆண்​டு​களாகி​யும் மாநக​ராட்​சி​யில் பேர் சொல்​லும்​படி​யாக எந்​தக் காரிய​மும் நடக்​க​வில்லை என ஆளும் கட்சி கவுன்​சிலர்​களே புலம்​பு​கி​றார்​கள். மக்​களின் குறை​களை எடுத்​துச் சொல்லி திட்​டங்​களை செயல்​படுத்​தலாம் என்​றால் மாமன்​றக் கூட்​டத்​தையே 3 அல்​லது 4 மாதங்​களுக்கு ஒரு​முறை​தான் கூட்​டு​கி​றா​ராம் மேயர் சுஜா​தா.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *