• June 7, 2025
  • NewsEditor
  • 0

அதிமுக ஆட்சி காலத்தில் (2011 – 2021) சுமார் எட்டாண்டு காலம் பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர். அப்போது சுகாதாரத்துறைக்கு அமைச்சராக இருந்த இவர், குட்கா முறைகேடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்ப்பு, தனியார் மருத்துவக் கல்லூரிக்கு விதிகளை மீறி அனுமதி அளித்தது, கரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு என அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கினார். இத்தனை சர்ச்சைகளில் சிக்கியவர், இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். திமுக-வும் இவரைக் கண்டும் காணாமல் இருக்கிறது.

2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய​பாஸ்​கருக்கு எதி​ரான பிரச்​சினை​களை எல்​லாம் அடுக்கி பிரச்​சா​ரம் செய்த திமுக, “கழக ஆட்சி வந்​ததும் கம்பி எண்ண வேண்டி இருக்​கும்” என கர்​ஜனை செய்​தது. அதன்​படியே ஆட்சி மாற்​றத்​துக்​குப் பிறகு விஜய​பாஸ்​கருக்கு எதி​ராக விறு விறு நடவடிக்​கை​கள் இருக்​கும் என அனை​வ​ரும் எதிர்​பார்த்​தார்​கள். ஆனால், வருடம் நான்​காகி​யும் அப்​படி எந்த நடவடிக்​கை​யும் பாய்ந்​த​தாக தெரிய​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *