• June 7, 2025
  • NewsEditor
  • 0

கோட்டா: ​ராஜஸ்​தான் மாநிலம் கோட்டா பகு​தி​யில் ஐசிஐசிஐ வங்கி கிளை உள்​ளது. இங்கு வாடிக்​கை​யாளர் தொடர்பு மேலாளராக பணி​யாற்​றிய​வர் சாக் ஷி குப்​தா. இவர் குறைந்த கால கட்​டத்தில் அதிக பணத்தை சம்​பா​திக்க ஆசைப்​பட்​டுள்​ளார். அதற்​காக வங்​கி​யில் வாடிக்​கை​யாளர்​கள் வைத்​திருந்த வைப்பு நிதியை சிறிது சிறி​தாக எடுத்து பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்​துள்​ளார். ஆனால், பங்​குச் சந்​தை​யில் சாக் ஷிக்கு பெருத்த நஷ்டம் ஏற்​பட்​டது. அதனால், வாடிக்​கை​யாளர்​களின் வங்கி கணக்​கில் அந்​தப் பணத்தை மீண்​டும் செலுத்த முடிய​வில்​லை.

எனினும், பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்து அதிக பணத்தை சம்​பா​திக்க, கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை​யில் 41 வாடிக்​கை​யாளர்​களின் வங்கி வைப்பு நிதி​யில் இருந்து ரூ.4.58 கோடியை எடுத்​துள்​ளார். இந்​நிலை​யில், ஒரு வாடிக்​கை​யாளர்​கள் வங்​கிக்கு வந்து தனது வைப்பு நிதி பற்றி விசா​ரித்​துள்​ளார். அப்​போது​தான் வைப்பு நிதி​யில் மோசடி நடந்​துள்​ளது தெரிய வந்​துள்​ளது. இதையடுத்து கடந்த பிப்​ர​வரி மாதம் 18ம்- தேதி வங்கி மேல​தி​காரி​கள் போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *