• June 7, 2025
  • NewsEditor
  • 0

இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய, ‘தி டைரி ஆஃப் எ கிரிக்கெட்டர்ஸ் வைஃப்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (ஜூன் 5) மும்பையில் நடைபெற்றது.

இதில், இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான ரோஹித் சர்மாவும் கலந்துகொண்டார்.

ரோஹித் மற்றும் புஜாரா

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இந்திய கேப்டன் ரோஹித், “எனக்கு இப்போது நியாபகம் இருக்கிறது.

ஜூனியர் கிரிக்கெட் நாள்களில் மும்பை அணியின் டீம் மீட்டிங் எப்போது புஜாராவை எப்படி அவுட்டாக்குவது என்பது பற்றி மட்டுமே இருந்தது.

அவரை நாங்கள் அவுட் செய்யாவிட்டால், ஆட்டத்தை நாங்கள் இழக்க நேரிடும்.

நான் 14 வயதாக இருந்தபோது, காலையில் மைதானத்திற்குச் சென்று மாலையில் திரும்பும்போது என் முகத்தின் நிறமே முற்றிலும் வித்தியாசமாக மாறியிருக்கும்.

ஏனெனில், நாள் முழுக்க அவர் பேட்டிங் செய்வார். 2 – 3 நாள்கள் நாங்கள் வெயிலில் ஃபீல்டிங் செய்வோம்.

வீட்டிலிருந்து கிளம்பி விளையாடச் செல்லும்போதும், 10 நாள்களுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பும்போதும் முகம் வித்தியாசமாக இருக்கும்.

முகம் ஏன் வித்தியாசமாக இருக்கிறது என இரண்டு முறை என் அம்மா என்னிடம் கேட்டது இன்னும் நியாபகமிருக்கிறது.

புஜாரா
புஜாரா

அப்போது, “நான் என்ன அம்மா செய்வது. புஜாரா என்ற பேட்ஸ்மேன் ஒருவர் இருக்கிறார். மூன்று நாள்கள் பேட்டிங் செய்கிறார்” என்று அம்மாவிடம் கூறுவேன்.

புஜாரா மீதான என் முதல் அபிப்பிராயமும் அதுதான். அவரின் இரண்டு முழங்கால்களில் காயம் ஏற்பட்டது. அதையெல்லாம் மீறி இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடினார்.

இந்த விளையாட்டை விளையாடுவதற்கு அவருக்கு மிகுந்த அர்ப்பணிப்பும் ஆர்வமும் இருந்தது” என்று கூறினார்.

இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் ஆகியிருக்கும் புஜாரா, 19 சதங்கள் உட்பட 7, 195 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *