• June 7, 2025
  • NewsEditor
  • 0

பரஸ்பர வரி – இதைப் பிற நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவித்தார்.

இதைச் சில நாடுகள் மவுனமாக ஏற்க, சில நாடுகள் அமெரிக்கா உடன் சமாதானத்திற்குச் சென்றது. ஆனால், சீனா மட்டும் எதிர்வினையாக அமெரிக்கா மீது வரி விதித்தது.

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் | US – China trade war

இதன் விளைவாக, மீண்டும் அமெரிக்கா சீனா மீது வரி விதிக்க, சீனா அமெரிக்கா மீது வரி விதிக்க என காட்சிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.

இந்த நிலையில், கடந்த மாதம், அமெரிக்காவும், சீனாவும் சமாதானத்தை எட்டின. அதனால், இரு நாடுகளும் மாற்றி மாற்றி சில வரிகளை விதித்துகொண்டது.

இந்த நிலையில், ‘வரும் ஜூன் 9-ம் தேதி, லண்டனில் அமெரிக்க அதிகாரிகளும், சீனா அதிகாரிகளும் சந்தித்து, இரு நாட்டு வர்த்தகம் குறித்து பேச உள்ளனர். இதை ட்ரம்பே தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

நேற்று முக்கிய நிகழ்வாக ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இந்தத் தொலைபேசி உரையாடலில், இருவரும் வரிப்போரை நிறுத்துவது குறித்துப் பேசியுள்ளனர். மேலும், கனிமவள ஒப்பந்தம் பற்றியும் பேசியுள்ளனர்.

சீனா பற்றிய கேள்விக்கு ட்ரம்ப் பதில் என்ன?
சீனா பற்றிய கேள்விக்கு ட்ரம்ப் பதில் என்ன?

இந்தத் தொலைபேசி அழைப்பு குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

“இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் தொலைபேசி உரையாடல் நீண்டது. மிகவும் பாசிட்டிவாக இந்தத் தொலைப்பேசி உரையாடல் முடிந்தது.

என்னையும், அமெரிக்காவின் முதல் பெண்மணியையும் ஜி ஜின்பிங் சீனாவிற்கு அழைத்துள்ளார். உலகின் இரண்டு பெரிய நாடுகளில் அதிபர்களால், வரும் காலத்தில் நன்மைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்”.

சீனா, ‘ட்ரம்ப் தான் தொலைபேசி அழைப்பிற்கு கோரிக்கை வைத்தார்’ என்று கூறியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *