
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் காயிதே மில்லத் 130-வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனர் மறைந்த காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்போர்வை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.